பின் தொடர்வோர்

Showing posts with label திருமால். Show all posts
Showing posts with label திருமால். Show all posts

Monday, 9 May 2022

503.முத்துநவரத்நமணி

 

503





மதுரை (= பத்மபுரி)

       தத்ததன தத்ததன தத்ததன தத்ததன

          தத்ததன தத்ததன           தனதான

முத்துநவ ரத்நமணி பத்திநிறை சத்தியிட

   மொய்த்தகிரி முத்திதரு                 எனவோதும்

முக்கணிறை வர்க்குமருள் வைத்தமுரு கக்கடவுள்

   முப்பதுமு வர்க்கசுர                        ரடிபேணி

பத்துமுடி தத்தும்வகை யுற்றகணி விட்டஅரி

   பற்குனனை வெற்றிபெற                   ரதமூரும்

பச்சைநிற முற்றபுய லச்சமற வைத்தபொருள்

   பத்தர்மன துற்றசிவம்                  அருள்வாயே

தித்திமிதி தித்திமிதி திக்குகுகு திக்குகுகு

   தெய்த்ததென தெய்த்ததென             தெனனான

திக்குவென மத்தளமி டக்கைதுடி தத்ததகு

   செச்சரிகை செச்சரிகை                  யெனஆடும்

அத்தனுட னொத்தநட நித்ரிபுவ னத்திநவ

   சித்தியருள் சத்தியருள்                     புரிபாலா

அற்பவிடை தற்பமது முற்றுநிலை பெற்றுவள

   ரற்கனக பத்மபுரி                        பெருமாளே.

பதம் பிரித்து உரை

முத்து நவ ரத்ந மணி பத்தி நிறை சத்தி இடம்

மொய்த்த கிரி முத்தி தரு என ஓதும்

முத்து = முத்தும். நவ ரத்ந மணி = நவரத்ன மணிகளும். பத்தி நிறை = வரிசையாக விளங்கும். சத்தி = பார்வதி. இடம் = (தமது) இடப் பாகத்தில். மொய்த்த = நெருங்கியுள்ள. கிரி = மலை போன்ற சிவபெருமான். முத்தி = முத்திக் கனியை அளிக்கும். தரு = மரம். என = என்றெல்லாம். ஓதும் = ஓதப்படும்.

முக்கண் இறைவர்க்கும் அருள் வைத்த முருக கடவுள்

முப்பது மூவர்க்க சுரர் அடி பேணி

முக்கண் இறைவர்க்கும் = மூன்று கண்களை உடைய சிவபெருமானுக்கும். அருள் வைத்த = அருள் பாலித்த. முருகக் கடவுள் =முருகக் கடவுள். முப்பது மூ வர்க்க சுரர் = முப்பத்து மூன்று வகையான தேவர்களும் அடி பேணி = (தமது) திருவடியைப் போற்றி விரும்ப

பத்து முடி தத்தும் வகை உற்ற கணி விட்ட அரி

பற்குனனை வெற்றி பெற ரதம் ஊரும்

பத்து முடி தத்தும் வகை உற்ற = (இராவணனுடைய) பத்துத் தலைகளும் சிதறும்படி. கணி விட்ட அரி = அம்பைச் செலுத்திய திருமால். பற்குனனை = அருச்சுனன். வெற்றி பெற = (போரில்) வெற்று பெறும் வகையில். ரதம் ஊரும் = தேரைச் செலுத்திய.

பச்சை நிறம் உற்ற புயல் அச்சம் அற வைத்த பொருள்

பத்தர் மனது உற்ற சிவம் அருள்வாயே

பச்சை நிறம் உற்ற புயல் = பச்சை நிறம் கொண்ட மேக நிறப் பெருமான் ஆகிய திருமால். அச்சம் உற வைத்த = (பதுமன், சிங்கமுகன், தாரகன் ஆகிய அசுரர்களிடத்தில் கொண்ட) பயத்தை நீங்க வைத்த. பொருள் = கடவுளே. பத்தர் மனது உற்ற = பக்தர்கள் மனத்தில் பொருந்தி விளங்கும். சிவம் = மங்கலத்தை. அருள்வாயே = அருள் புரிவாயாக.

தித்திமிதி............தெனனான

திக்கு என மத்தளம் இடக்கை துடி தத்தகுகு

........என ஆடும்

தித்தி....என = இவ்வாறான ஒலிகளுடன் மத்தளம் = மத்தளம் இடக்கை = இடது கையால் அடிக்கப்படும் ஒரு தோல் கருவி துடி = உடுக்கை ஆகியவை ஒலிக்க தத்த...என ஆடும் = நடனம் ஆடும்.

அத்தனுடன் ஒத்த நடநி திரி புவனத்தி நவ

சித்தி அருள் சத்தி அருள் பாலா

அத்தனுடன் = சிவபெருமானுடன். ஒத்த = ஒத்ததான. நடநி = நடனம் புரிபவள். த்ரி புவனத்தி = மூன்று லோகங்களுக்கும் முதல்வி. நவ சித்தி அருள் = புதுமையான சித்திகளை அருளும். சத்தி = பார்வதி. அருள் புரி பாலா = ஈன்றருளிய குழந்தையே.  [அத்தன் என்றால் தகப்பன் என்று தமிழில் பொருள். பழைய இலக்கியங்களில் அத்தா என்ற சொல்லை நிறைய இடங்களில் காணலாம். அத்தா, அச்சன், முத்தன், அப்பா என்பதெல்லாம் தகப்பன் என்பதனையே குறிக்கும்]

அற்ப இடை தற்பம் அது முற்று நிலை பெற்று வளர்

அல் கனக பத்ம புரி பெருமாளே.

அற்ப இடை = நுண்ணிய இடையை உடைய மாதர்களின். தற்பம் அது முற்றும் = மெத்தை வீடுகள் எல்லாம். நிலை பற்று வளர் = நிலை பெற்றனவாய் உயர்ந்த. அல் = மதில்களுடன் விளங்கும். கனக பத்ம புரி = பொற்றாமரைக் குளம் விளங்கும் பட்டணமாகிய மதுரையில் வீற்றிருக்கும். பெருமாளே = பெருமாளே.

சுருக்க உரை

முத்தும் நவ மணிகளும் வரிசையாக விளங்கும் பார்வதி தேவி தமது இடப் பாகத்தில் நெருங்கியுள்ளவரும், முத்திக் கனியை அளிக்கும் தரு என்று சிறப்பித்து ஓதப்படுபவரும் ஆகிய சிவபெருமானுக்கும் அருள் பாலித்துப் பிரணவத்தை உபதேசித்த முருகக் கடவுளே! முப்பது மூன்று வகையான தேவர்களாலும் விரும்பிப் போற்றப்படுவனே!

இராவணனுடைய பத்துத் தலைகளும் சிதறும்படி அம்பைச் எய்தவனும், அருச்சுனன் போரில் வெற்று பெற அவனுடைய தேரைச் செலுத்தியவனும் ஆகிய மேக நிறம் கொண்ட திருமால், அசுரர்களிடம் கொண்ட பயத்தை நீக்கி, மங்கலத்தை அருளியவனே! பல வகையான வாத்தியங்கள் முழங்க, நடனம் புரியும் சிவபெருமானுடன் ஒத்தவாறு நடனம் செய்த பார்வதி ஈன்ற குழந்தையே! நுண்ணிய இடை உடைய மாதர்களின் மெத்தை வீடுகள் எல்லம் மதில்களுடன் விளங்கும், பொற்றாமரைக் குளம் சிறந்து விளங்கும் மதுரையில் வீற்றிருக்கும் பெருமாளே! உன் பக்தர்களுக்குச் சிவத்தை அருள்வாயே.

விளக்கக் குறிப்புகள்

இந்தப் பாடலின் முதல் நான்கு அடிகள் முத்தைத் தரு என்னும் பாடலை ஒத்தனவாகும்.

முப்பத்து மூன்று தேவர்கள்.....

12 ஆதித்தியர்கள் 8 வசுக்கள், 11 ருத்திரர்கள்இந்திரன் மற்றும் பிரஜாபதி ஆகியோரைச் சேர்த்து முப்பத்தி மூன்று தேவர்கள் என ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த முப்பத்தி மூன்று தேவர்களையே தற்போது முப்பத்தி முக்கோடி தேவர்கள் என அறியப்படுகிறது. கோடி என்பது எண்ணிக்கை அல்ல அதன் உண்மையான அர்தம் "பிரிவு".  ஆதித்ய நிலையில் 12 பிரிவுகள்

1) விஷ்ணு 2)தாதா 3) மித 4) ஆர்யமா 5) ஷக்ரா 6) வருண 7) அம்ஷ 8) பாக 9) விவாஸ்வான் 10) பூஷ 11) ஸவிதா 12) தவாஸ்தா

வசு நிலையில் 8 வகையாவன:

14. த்ருவ 15. சோம 17. அனில 18. அனல 19. ப்ரத்யுஷ 20. ப்ரபாஷ

ருத்ரன் நிலையில் 11 பிரிவுகள்  22. பஹூரூப 23. த்ரயம்பக 24. அபராஜிதா 25. ப்ருஷாகாபி 26. ஶம்பூ 27. கபார்தி 28. ரேவாத் 29. ம்ருகவ்யாத 30. ஷர்வா 31.கபாலி

மற்றும் 2 பிரிவு அஷ்வினி குமாரர்கள்

ஆக மொத்தம் = 33 வகையான(பிரிவுகளான) தெய்வங்கள்

பற்குனன் = பல்குணன்.  உத்திர பல்குணி உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவன் அருச்சுனன்.அதனால் பல்குணன் என்ற பெயர் அவனுக்கு.

கனக பத்மம்....

இந்த தீர்த்தம் மதுரைத் திருக் கோயிலுள் உள்ளது. இது பொற்றாமரைக் குளம் எனப்படும்.

Rev: 30-5-22

பாடலை கேட்க


 

Sunday, 13 March 2022

493 விடுங்கை

 493

சிதம்பரம்

 


          தனந்தத் தத்தன தானன தானன

             தனந்தத் தத்தன தானன தானன

             தனந்தத் தத்தன தானன தானன  தனதான

 

விடுங்கைக் கொத்தக டாவுடை யானிட

   மடங்கைக் கைச்சிறை யானஅ நேகமும்

   விழுங்கப் பட்டற வேயற லோதியர்          விழியாலே

விரும்பத் தக்கன போகமு மோகமும்

   விளம்பத் தக்கன ஞானமு மானமும்

   வெறுஞ்சுத் தச்சல மாய்வெளி யாயுயிர்   விடுநாளில்

இடுங்கட் டைக்கிரை யாயடி யேனுடல்

   கிடந்திட் டுத்தம ரானவர் கோவென

   இடங்கட் டிச்சுடு காடுபு காமுன                மனதாலே

இறந்திட் டுப்பெற வேகதி யாயினும்

   இருந்திட் டுப்பெற வேமதி யாயினும்

   இரண்டிற் றக்கதொ ரூதியம் நீதர          இசைவாயே

கொடுங்கைப் பட்டம ராமர மேழுடன்

   நடுங்கச் சுக்ரிவ னோடம ராடிய

   குரங்கைச் செற்றும கோததி தூளெழ      நிருதேசன்

குலங்கட் பட்டநி சாசரர் கோவென

   இலங்கைக் குட்டழ லோனெழ நீடிய

   குமண்டைக் குத்திர ராவண னார்முடி      அடியோடே

பிடுங்கத் தொட்டச ராதிப னாரதி

   ப்ரியங்கொட் டக்கநன் மாமரு காஇயல்

   ப்ரபஞ்சத் துக்கொரு பாவல னாரென      விருதூதும்

ப்ரசண்டச் சொற்சிவ வேதசி காமணி

   ப்ரபந்தத் துக்கொரு நாதச தாசிவ

   பெரும்பற் றப்புலி யூர்தனில் மேவிய     பெருமாளே.

 

   பதம் பிரித்து உரை

  

விடுங்கைக்கு ஒத்த கடா உடையான் இடம்

அடங்கி கை சிறையான அநேகமும்

விழுங்கப்பட்டு அறவே அறல் ஓதியர் விழியாலே

விடுங்கைக்கு ஒத்த = ஏறி நடத்துவதற்கு ஏற்ற. கடா = எருமைக் கடாவை உடையான் இடம் = உடைய யமன் வசத்தே    அடங்கி அடங்கி. கைச்சிறையான = கை வசத்திலிருந்த அநேகமும் = பல     பொருள்களும் அறல் = கருமணலைப் போல் கரு நிறம் கொண்ட ஓதியர் = கூந்தலை உடைய விலை மாதர்களின்   விழியாலே = கண்களால் விழுங்கப்பட்டடு = கவரப்பட்டு

 விரும்ப தக்கன போகமும் மோகமும்

விளம்ப தக்கன ஞானமும் மானமும்

வெறும் சுத்த சலமாய் வெளியாய் உயிர் விடும் நாளில்

விரும்பத் தக்கன = விரும்பி அடையத் தக்கனவான போகமும் = சுக போகங்களும் மோகமும் = ஆசைகளும்   விளம்பத் தக்கன வெளியாய் விடு = ஆவி வெளிப்பட்டுப் போகின்ற. நாளில் = அந்த நாளில்.

 இடும் கட்டைக்கு இரையாய் அடியேன் உடல்

கிடந்திட்டு தமர் ஆனவர் கோ என

இடம் கட்டி சுடு காடு புகா முனம் மனதாலே

அடியேன் = அடியேனுடைய உடல் = இவ்வுடல் இடும் கட்டைக்கு = (சுடு காட்டில்) அடுக்கப்படும் விறகு கட்டைகளுக்கு  இரையாய் = உணவாகி கிடந்திட்டு = கிடக்கும் போது தமர்ஆனவர்    = சுற்றத்தார்கள் கோ என கோ என்று கதற இடம் கட்டி = கிடக்கும் இடத்தில் (பாடையில்) கட்டி சுடு காடு புகா முனம் = சுடு காட்டுக்குப் போவதற்கு முன்னே மனதாலே = என் மனம்.

 இறந்திட்டு பெறவே கதியாயினும்

இருந்திட்டு பெறவே மதியாயினும்

இரண்டில் தக்கது ஒரு ஊதியம் நீ தர இசைவாயே

இறந்திட்டு =(உன்னுடன் இரண்டறக்)     கலந்திட்டு கதியாயினும் பெறவே = நற்கதி அடையும் பலனைப் பெறவாவது   இருந்திட்டு = (அல்லது) இந்த உலகில் இருக்கும் போதே மதியாயினும் பெறவேஅறிவைப் பெறவாவது இரண்டில் தக்கதொரு மேற் சொன்ன இரண்டில் எனக்குத் தகுந்ததான ஊதியம்    = வரத்தை நீதர இசைவாயே = நீயே முடிவு செய்து அதைக் கொடுக்க இசைந்தருளுக

கொடுங்கை பட்ட மராமரம் ஏழுடன்

நடுங்க சுக்ரிவன் அவனோடு அமர் ஆடிய

குரங்கை செற்று மகா உததி தூள் எழ நிருதேசன்

கொடுங்கைப் பட்ட = கொடுமைக்கு இடமான மரா மரம் ஏழுடன் =    ஏழு மராமரங்களுடன் சுக்ரீவன் நடுங்க சுக்ரீவன் நடுங்கும்படி அவனோடு  அமர் ஆடிய =   அவனுடன்  சண்டை  செய்து   குரங்கைச் செற்று = குரங்காகிய வாலியை அழித்து மகா உததி = பெரிய கடல் தூள் எழ தூள் படும்படி நிருதேசன்    அரக்கர்தலைவனுடைய

குலம் கண் பட்ட நிசாசரர் கோ என

இலங்கைக்குள் தழலோன் எழ நீடிய

குமண்டை குத்திர ராவணனார் முடி அடியோடே

குலம் கண் பட்ட குலத்தைச் சார்ந்த நிசாசரர் அரக்கர்கள் எல்லாம் கோ என கோவென அலற   இலங்கைக்குள் = இலங்கை நகருள்   தழலோன் அக்கினி பகவான்   எழ =   எழுந்துவேலை செய்ய   நீடிய =   பெருத்த குமண்டை = செல்வம் மேலீட்டால் செருக்குண்ட குத்திர = வஞ்சகம் கொண்ட இராவணனார் = இராவணனனுடைய முடி =   தலைகள் அடியோடே = அடியோடு

 பிடுங்க தொட்ட சர அதிபனார் அதி

ப்ரியம் கொள் தக்க நல் மா மருகா இயல்

ப்ரபஞ்சத்துக்கு ஒரு பாவலனார் என விருது ஊதும்

பிடுங்க =பிடுங்கப்படும்படிதொட்ட = செலுத்திய சராதிபன் அம்பைக் கொண்ட மேலோனாகிய இராமன். அதி அதிக ப்ரயம் கொள் தக்க அன்பு கொள்ளத் தக்க   நல்   = நல்ல மா சிறந்த மருகா = மருகனே இயல் = இயற்றமிழ் ஆதிய முத்தமிழ் வழங்கும்   ப்ரபஞ்சத்துக்கு = உலகத்துக்கு ஒரு ஒப்பற்ற பாவலன் = கவி அரசன் என என்று விருது ஊதும் = வெற்றிச் சின்னங்கள் ஊதும்.

 ப்ரசண்ட சொல் சிவ வேத  சிகாமணி

ப்ரபந்தத்துக்கு ஒரு நாத சதாசிவ

பெரும்பற்றப் புலியூர் தனில் மேவிய பெருமாளே.

 ப்ரசண்ட = வீரம்வாய்ந்த சொல் = பதிகங்களை ஓதிய சிவ வேத சிகாமணி = சிவ வேத சிகாமணியாகிய ஞான சம்பந்த மூர்த்தியே ப்ரபந்தத்துக்கு ஒரு நூல் வகைகளுக்கெல்லாம் ஒரு நாத = ஒப்பற்ற தலைவனே சதாசிவ = என்றும்

மங்களமானவனே பெரும்பற்றப் புலியூர் தனில் மேவிய பெருமாளே = சிதம்பரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே!

( வியாக்கிரபாதர் பெரும் பற்று வைத்துச் சிவநடனத்தைத் தரிசிக்கத் தவஞ்செய்த

திருத்தலம் சிதம்பரம்)

 சுருக்க உரை

 கரு மணல் போல் கறுத்த கூந்தலை உடைய விலைமாதர்களின் கண்களால் கவரப்பட்டுவிரும்பி அடையும் போகப் பொருள்களும்புகழத் தக்க அறிவும் பெருமையும் முழுப் பொய்யாகியமன் வசத்தே அடங்கி, என் உயிர் பிரிந்துநான் இறக்கும் நாளில்என் உடல் விறகுக் கட்டைகளுக்கு உணவாகும் நாளில்சுற்றத்தார் அலறசுடு காட்டுக்குப் போவதற்கு முன்னம்என் மனம் உன்னோடு ஒருமைப்பட்டு நற்கதி அடையும் பலனைப் பெறவாவதுஅல்லது இவ்வுலகில் இருக்கும் போதே நான் நல்ல அறிவைப் பெறவாவது,இந்த இரண்டில் எனக்குத் தகுந்தது எது என்று நீயே முடிவு செய்துஅதை எனக்குக் கொடுக்க இசைந்தருளுக.

 கொடுமைக்கு இடமான ஏழு மராமரங்களுடன்சுக்ரீவன் நடுங்கஅவனோடு போர் செய்த வாலியாகிய குரங்கை அழித்துகடல் தூள் படஅரக்கர்கள் அலறஇலங்கை நகரம் தீப்புகவஞ்சகம் கொண்ட இராவணன் தலைகள் அடியோடு பிடுங்கப்படும்படி அம்பைச் செலுத்திய இராமபிரான் விரும்பும் மருகனே!. முத்தமிழ் வழங்கும் உலகத்தில் கவி அரசன் என்ற வெற்றி சின்னங்கள் ஊதும் வீரம் வாய்ந்த சம்பந்த மூர்த்தியே!. நூல் வகைகளுக்கெல்லாம் தலைவனே! தில்லையில் வீற்றிருக்கும் பெருமாளே!. எனக்குத் தகுந்த வரத்தை நீயே முடிவு செய்து தந்தருளுக.


விளக்கக் குறிப்புகள்

 மராமரம் ஏழுடன் நடுங்கச் சுக்ரீவன்....

   இவை கிட்கிந்தைக்கு அருகில் இருந்த ஏழு ஆச்சா மரங்கள். இவற்றை   இராமர் ஒரு பாணத்தால் பிளந்தார்.

 எழுவகை மராமரமு நிகரொன்றுமில்

   வலிய திறல் வாலி யுரமும் நெடுங்கட லலையேழும்.

.                  ..திருப்புகழ்விடமும்வடி

 

மராமரம் ஏழும் எய்த வலத்தினான் ...பெரிய திருமொழி    

 

வாலியைக் கொன்று அரசி இளைய வானரத்துக் களித்தவனே                      ...பெருமாள்   திருமொழி

 

ப்ரபந்தத்துக்கு ஒரு நாத.....

அணைந்த மாமறை முதல் கலை அகிலமும் ஓதாது உணர்ந்த முத்தமிழ் விரகன் வந்தான் என ஊத

    ...பெரிய புராணம், திருஞான சம்பந்தர்.

 

அருணகிரி நாதர் வரம் கேட்கும் நயம் கவனிக்கத் தக்கது.