448
திருவருணை
  
              தனதானன தான தனத்தந்           தனதானா 
  
இமராஜனி லாவதெ றிக்குங் கனலாலே 
   இளவாடையு மூருமொ றுக்கும்    படியாலே
சமராகிய மாரனெ டுக்குங்  கணையாலே 
   தனிமானுயிர் சோரும தற்கொன் றருள்வாயே
குமராமுரு காசடி லத்தன் குருநாதா 
   குறமாமக ளாசைத ணிக்குந்       திருமார்பா 
அமராவதி வாழ்வம ரர்க்கன் றருள்வோனே 
   அருணாபுரி வீதியி னிற்கும்       பெருமாளே 
 
பதம் பிரித்து உரை 
இம ராஜன் நிலா அது எறிக்கும் கனலாலே 
இள வாடையும் ஊரும் ஒறுக்கும் படியாலே 
இம ராஜன் - பனிக்கு அரசனாகிய நிலா - சந்திரன் எறிக்கும் கனலாலே - வீசுகின்ற நெருப்பாலும் இள வாடையும் - மெல்லிய தென்றலும் ஊரும் ஒறுக்கும் - ஊராரும் வருத்துகின்ற படியாலே - தன்மையாலும்
சமர் ஆகிய மாரன் எடுக்கும் கணையாலே 
தனி மான் உயிர் சோரும் அதற்கு ஒன்று அருள்வாயே 
சமர் ஆகிய - போர்க்கென எழுந்த மாரன்
- மன்மதன் எடுக்கும் கணையாலே - தொடுக்கும் மலர்ப் பாணங்களாலும் தனி மான் உயிர் - தனித்துக் கிடக்கும் மான் போன்ற இப்பெண்ணின் உயிர்
சோரும் அதற்கான - சோர்வு அடைகின்றதே அதற்கு ஒன்று - ஒரு வழியை அருள்வாயே
- அருள்வாயாக
குற மா மகள் ஆசை தணிக்கும் திரு மார்பா 
குமரா முருகா - குமரனே, முருகனே சடிலத்தன் - சடையை உடைய சிவபெருமானுக்கு
குரு நாதா - குரு நாதரே குற மா மகள் - சிறந்த குறப் பெண்ணாகிய வள்ளியின்
ஆசை தணிக்கும் திரு மார்பா - ஆசையை நிறைவேற்றிய அழகிய மார்பனே 
அமராவதி வாழ் அமரர்க்கு அன்று அருள்வோனே 
அருணா புரி வீதியில் நிற்கும் பெருமாளே 
சுருக்க உரை 
குமரா, முருகா, சடையை உடைய சிவனுக்கு உபதேசம் செய்தவனே குறமகளாகிய வள்ளியின் ஆசையை நிறைவேற்றியவரே தேவர்களுக்குப் பொன் உலக வாழ்வை அன்று அருளியவனே எனக்கு அருள் செய்வாயாக
(இப்பாடல் அகப் பொருள் துறையைச் சேர்ந்தது ) 

No comments:
Post a Comment