369
பொது
            தனன தனதனன தான தானன 
              தனன தனதனன தான தானன
              தனன தனதனன தான தானன       தந்ததான
சுருதி வெகுமுகபு ராண கோடிகள்
    சரியை கிரியைமக
யோக மோகிகள் 
    துரித பரசமய
பேத வாதிகள்                என்றுமோடித் 
தொடர வுணரஅரி தாயதூரிய 
    பொருளை யணுகியநு போக மானவை 
     தொலைய இனியவொரு ஸ்வாமி யாகிய   நின்ப்ரகாசங்
கருதி யுருகியவி ரோதி யாயருள்
    பெருகு
பரமசுக மாம கோததி 
    கருணை யடியரொடு
கூடு யாடிம            கிழ்ந்துநீபக் 
கனக மணிவயிர நூபு ராரிய 
    கிரண சரணஅபி ராம கோமள 
    கமல யுகளமற வாது பாடநி               னைந்திடாதோ
மருது நெறுநெறென மோதி வேரோடு
    கருது மலகைமுலை
கோதி வீதியில் 
    மதுகை யொடுதறுக
ணானை வீரிட           வென்றுதாளால் 
வலிய சகடிடறி மாய மாய்மடி 
    படிய நடைபழகி யாயர் பாடியில் 
    வளரு முகில்மருக வேல்வி நோதசி           கண்டிவீரா
விருதர் நிருதர்குல சேனை
சாடிய 
    விஜய கடதடக
போல வாரண 
    விபுதை
புளகதன பார பூஷண                   அங்கிராத 
விமலை நகிலருண வாகு பூதர 
    விபுத கடககிரி மேரு பூதர 
    விகட சமரசத கோடி வானவர்                  தம்பிரானே
பதம்
பிரித்து உரை
சுருதி
வெகுமுக புராண கோடிகள் 
சரியை
கிரியை மக யோக மோகிகள் 
துரித
பர சமய பேத வாதிகள் என்றும் ஓடி
சுருதி
- வேதமும் வெகுமுக - பலவிதமான புராண கோடிகள் - கோடிக் கணக்கான புராணங்களும் சரியை - சரியை மார்க்கத்தில் இருப்பவர்களும்
கிரியை - கிரியை மார்க்கத்தில் நடப்பவர்களும் மக யோக மோகிகள் – மகா யோக மார்க்கத்தில் இருப்பவர்களும்
துரிதம் – அவற்றை
யெல்லாம் கடந்த நிலையை அடைந்தவர்களும் பர சமய பேத வாதிகள் - பர சமய பேதங்களை மேற்கொண்டு வாதிப்பவர்களும் என்றும் ஓடி - ஓடி ஓடி ஆராய்ந்து
தொடர
உணர அரிதாய தூரிய 
பொருளை
அணுகி அநுபோகமானவை 
தொலைய
இனி ஒரு ஸ்வாமியாகிய நின் ப்ரகாசம்
தொடர
உணர அரிதாய - தொடர்ந்து
பற்றதற்கும், உணர்ந்து கொள்ளுவதற்கும் அருமையானதான தூரிய பொருளை - சுத்த
நிலைப் பரம் பொருளை
அணுகி - அண்டி
நெருங்கி
அநுபோகமானவை - (உலக) அனுபவங்கள் தொலைய - தொலைந்து ஒழிய
இனிய - இன்பம்
தரும் ஒரு - ஒப்பற்ற ஸ்வாமியாகிய - சுவாமியகிய நின் ப்ரகாசம் - உன்னுடைய பேரொளியை
கருதி
உருகி அவிரோதியாய் அருள் 
பெருகு
பரம சுக மா மகா உததி 
கருணை
அடியரொடு கூடு ஆடி மகிழ்ந்து நீப
கருதி
- தியானித்து உருகி - மனம் உருகி அவிரோதயாய் - எல்லா உயிரும் தனது உயிர் என்னும்
கருதும் மனம் உடையவனாக அருள் பெருகு - கருணை நிறைந்த பரம சுக - மேலான இன்பமான மகா உததி - பெரிய கடலில் அடியரொடு கூடி மகிழ்ந்து - உன் அடியார்களுடன் கூடி மகிழ்ந்து நீப - கடம்பும்
கனக
மணி வயிர நூபுரம் ஆரிய 
கிரண
சரண அபிராம கோமள 
கமல
உகளம் மறவாது பாட நினைந்திடாதோ
கனக
மணி வயிரம் - பொன்,
இரத்தினம், வயிரம் இவை விளங்கும்
நூபுரம் ஆர் - சிலம்பு
அணிந்ததும்
ஆரிய - மேலான
கிரண - ஒளி வீசுவதும் சரணம் - அடைக்கலம் தரும் அபிராம - அழகிய கோமள - இளமை விளங்குவதான கமல உகளம் - திருவடித் தாமரைகளை மறவாது - (நான்) மறக்காமல் பாட நினைந்திடாதோ - பாடத் தங்கள் திருவுள்ளம் நினைவு கொள்ளாதோ?
மருது
நெறு நெறு என மோதி வேரோடு 
கருதும்
அலகை முலை கோதி வீதியில் 
மதுகையொடு
தறுகண் ஆனை வீரிட வென்று தாளால்
மருது
- மருத மரங்களை நெறு நெறு எனி - நெறுநெறு என்று ஒலிக்குமாறு வேரோடு மோதி - வேருடன் முறியும்படி மோதியும் கருதும் - (தன்னைக் கொல்லும்) எண்ணத்துடன் வந்த அலகை - அலகைப் பேயின்
முலை - கொங்கையை
கோதி - குடைந்து தோண்டியும்
வீதியில் - தெருவில் மதுகையொடு - வலிமையுடன் தறுகண் - கொடுமையுடன் (கொல்ல வந்த)
ஆனை வீரிட - குவலயா
பீடம் என்னும் யானை
அலறிக் கூச்சலிட வென்று - (அதை) வென்றும் தாளால் - காலால்
வலிய
சகடு இடறி மாயமாய் மடி 
படிய
நடை பழகி ஆயர் பாடியில் 
வளரும்
முகில் மருக வேல் விநோத சிகண்டி வீரா
வலிய
- வலிமை வாய்ந்த
சகடு - வண்டியை
இடறி - எற்றி உதைத்து மாயமாய் - தந்திரமாய் மடிபடிய - இறக்க நடை பழகி - (மீண்டும்) தவழ்ந்து நடந்தும் ஆயர் பாடியில் - இடைச் சேரியில் வளரும் - வளர்ந்த முகில் - மேக வண்ணனாகிய திருமாலின் மருக - மருகனே வேல் விநோத - வேலாயுதத்தை ஏந்தும் அற்புத மூர்த்தியே சிகண்டி வீரா - மயில் வீரனே
விருதர்
நிருதர் குல சேனை சாடிய 
விஜய
கட தடக போல வாரண 
விபுதை
புளக தன பார பூஷண அம் கிராத
விருதர்
நிருதர் - வீரர்களாகிய
அசுரர்களின்
குல சேனை - குலச்
சேனைகளை சாடிய - துகைக்கழித்த விஜய - வெற்றியாளனே கடம் - மதத்தையுடைய தட - விசாலமான கபோல - கன்னத்தை உடைய வாரணம் - யானையாகிய (ஐராவதம் வளர்த்த) விபுதை - தேவ சேனையின் புளக - புளகம் கொண்ட தன பாரம் - கொங்கைப் பாரங்களை பூஷண - அலங்காரமாகத் தரித்துள்ளவனே அம் - அழகிய கிராத - வேடர் குலத்து
விமலை
நகில் அருண வாகு பூதர 
விபுத
கடக கிரி மேரு பூதர 
விகட
சமர சத கோடி வானவர் தம்பிரானே
விமலை
- தூயவளான வள்ளியின் நகில் - கொங்கையை (அணையும்) அருண - சிவந்த வாகு பூதர - தோள் மலையை உடையவரே விபுத கடக - தேவர்கள் சேனைக்கு நாயகனே கிரி மேரு பூதர - மலைகளுள் மேருமலையுடன் விகட - மாறு பட்டு சமர - பொருதவனே சத கோடி வானவர் தம்பிரானே - நூறு கோடி தேவர்களுக்குத் தம்பிரானே
சுருக்க
உரை
வேதங்களும், சரியை, கிரியை, யோகம் ஆகிய மார்க்கங்களில்
இருப்போரும், பர சமயங்களை மேற்கொண்டு வாதிப்பவர்களும், உணர்தற்கு அரிதான சுத்த நிலைப்
பரம் பொருளை நெருங்கி, உலக சுகங்கள் ஒழிய, மூவாAசுகள் அற்றுப் போக, இன்பம் தரும் சுவாமியே
உன்னைத் தியானித்து, மனம் உருகி, எல்லா உயிரையும் தனதாகக் கருதும் இயல்புடையவனாக, உன்
அடியார்களுடன் கூடி மகிழ்ந்து, கடம்பும், மணிகளும் விளங்கும் திருவடிகளை நான் மறவாமல்
பாடுதற்குத் தங்கள் உள்ளம் நினைவு கொள்ளாதோ?
மருத மரமாக வந்த அசுரனை முறித்து அழித்தும், தன்னைக்
கொல்ல வந்த அலகைப் பேயின் கொங்கையை அறுத்தும், குவலயா பீடம் என்ற மத யானையைக் கொன்றும்,
வண்டியை எட்டி உதைத்தும், பற்பல திருவிளையாடல் புரிந்து, ஆயர் பாடியில் வளர்ந்த திருமாலின்
மருகனே, 
ஐராவதம் வளர்த்த தேவசேனையின்
கொங்கைகளைத் தரித்துள்ளவனே, 
வேடர்களின் பெண்ணாகிய வள்ளியியை
அணையும் தோள் மலையை உடையவனே, 
மேரு மலையுடன் மோதியவனே,
தேவர்களுக்குத் தம்பிரானே,
உன்னை மறவாது நான் பாட
அருள் புரிவாயாக 
விளக்கக்
குறிப்புகள் 
1.   சுருதி வெகுமுக புராண : ஒப்புக:
சுருதியூடு கேளாது சரியை யாளர் காணாது 
துரியமீது சாராது எவராலும் தொடரொணாது
                    – திருப்புகழ்,
 சுருதியூடு கேளாது 
2.     
தொடர உணர அரிதாய : ஒப்புக:  தொடா டாது நேராக வடிவு காண
வாராது, திருப்புகழ்
3.  மருது
நெறு நெறென மோதி-  ஒப்புக: 
பரிவொடும
கிழ்ந்தி றைஞ்சு மருதிடைத வழ்ந்து நின்ற பரமபத நண்ப ரன்பின் மருகோனே 
                                 - திருப்புகழ்  மருமலரி 
4.  கருது
மலகைமுலை கோதி : ஒப்புக:-
எங்குங் கஞ்சன் வஞ்சன் கொஞ்சன் 
அவன்விடு மதிசய வினையுறு மலகையை 
வென்றுங் கொன்றுந் துண்டந் துண்டஞ்
                      - திருப்புகழ்,
குன்றுங்குன்றுங் 
பேயானாள் போர் வென்றெதி ரிட்டவன் மருகோனே           - திருப்புகழ், நேசாசாரா 
5.  வலிய
சகடிடறி மாய மாய் மடிபடிய 
நந்த
கோபாலன் வீட்டில் ஒரு வண்டியின் கீழ் கண்ணன் பள்ளி கொண்டிருந்த போது, கம்சனால் ஏவப்பட்ட
சகடாசுரன் அவரைக் கொல்ல வந்தான் கண் ணன் பாலுக்கு அழுகிற பாவனையில் அவ்வண்டியை உதைத்து
அசுரனைக் கொன்றார்
ஒப்புக:- கஞ்சன்வி டுஞ்சக டாசு ரன்பட 
              வென்றுகு ருந்தினி
லேறி 
                        – திருப்புகழ்,
வஞ்சனைமிஞ்சிய 
6.  தறுகண்
ஆனை வீரிட வென்று
ஒப்புக:-
மருகையொடு தறுகணானை வீரிட வென்று 
    மாயைவல கஞ்ச னால்விடவெ குண்டு 
    பார்முழுது மண்ட கோள முநடுங்க 
    வாய்பிளிறி நின்று , 
                      -  திருப்புகழ்,
சீயுதிரமெங்கு 
ஆயர்பாடியில்
கண்ணன் வளர்ந்த போது அவரைக் கொல்லும் பொருட்டு மாயங்கள் பல கம்சன் செய்தான், அவன் புரிந்த
மாயச் செயல்களால் கண்ணன் பாதிக்கப்படவில்லை. பின்னர் அவரை மதுரைக்கு அழைத்தான். அவர்
வரும்போது தனது பட்டத்து யானையாகிய குவலயா பீடம் என்ற யானைக்கு மதம் ஏற்றி அவரைக் கொல்லுவதற்கு
ஆயத்தம் புரிந்து வைத்தான். கண்ணபிரான் அம் மதயானையின் கொம்புகளை ஒடித்து, அந்த யானையையும்,
கம்சனையும், கொன்றதாக புராணம் சொல்லும்.
சரியை,
கிரியை, யோகம், ஞானம் பற்றி ஒரு சிறு குறிப்பு - 
இறைவனை
அடைகிற நெறிகள் நான்கு  தாச நெறி  ஆண்டானடிமைத்திறம் சற்புத்ர  நெறி தந்தையும் மைந்தனுமாக நிற்றல் தோழ நெறி தோழமை
கொண்டு வணங்குதல் நாயகி – நாயக நெறி இறைவனைக் கணவனாக் கொண்டு ஆன்மா நாயகியாகி அன்பு
செய்தல் 
முதல்
நெறியான தாச நெறியில் சரியை ஆண்டவன் அடிமைத்திறத்தில் ஒரு அச்சம் இருக்கும் இறைவனின்
அருள் ஒரு வேலைக்கரானுக்கு கொடுக்கும் ஊதியத்தைப் போலவே இருக்கும்  பயம்கலந்த பக்தியுடன் கடவுளை உணர முற்படுவது இறைவன்
ஒரு குறிப்பிட்ட இடத்தில் உறைபவர் என்று எண்ணி கோவில்களில் சென்று வழிபடுவது இறைவனைத்
தன்னிலும் வேறுபட்டவனாக சிந்திப்பது இது முதல் நிலை இறைவனை பயத்துடன் அணுகுவது உருவவழிபாடுகளும்,
நீண்ட பூசை நெறிகளுமே முக்கியம்  தான் ஆண்டவனின்
அடிமை என்றே எண்ணுதல் நாவுக்கரசரின் பக்தி இத்தகையது,
தந்தையும்
மைந்தனுமாக இருக்கிம் சற்புத்ர நெறியில் கிரியை என்பது ஒருவர் அன்புகலந்த பக்தியுடன்
கடவுளை உணர முற்படுவது இறைவன் தன் வீட்டினுள்ளும் உறைபவர் என்று எண்ணி வீட்டினுள் அமைந்த
பூசை அறையுள், பெரியோர்கள் போதித்த நெறிமுறைப்படி வழிபடுவது இறைவன் தனக்கு அணுக்கமானவன்
என்று சிந்திக்க தொடங்குவது இவ்விரண்டாம் நிலையில் இறைவனை பாசத்துடன் அணுகுவது உருவ
வழிபாடு, கூட்டாக சேர்ந்து  வணங்குவது, நூல்களை
ஓதுவது போன்றவை இதனுடன் தொடர்புள்ளவை கடவுளை தன் தந்தையை போல் நேசித்தல் 
தந்தையின்
சொத்து அத்தனையும் மகனுக்காவது போல  இறைவனின்
அருள் பூர்ணமாக அடியவருக்கு கிடைக்க ஏதுவாகிறது சம்பந்தர் இறைவனை நேசித்தது போல  
தோழமை
நெறியில் யோகம் இறைவனை மைந்தனை விட நெருங்கி பழக வாய்பிருக்கிறது ஒருவர் தன் உடலுள்
கலந்த (ஊன்கலந்த) பக்தியுடன் கடவுளை உணர முற்படுவதாகும் இறைவன் தன் உடலுள்ளும் உறைபவர்
என்று எண்ணி உடலை ஓர் ஆலயம் என பாவித்து, அதன் ஆறு ஆத்மத்தானங்களான மூலாதாரம் முதலானவற்றில்
கடவுள் உறைகிறார் என்று சிந்தித்து, குரு காட்டிய நெறிப்படி வணங்கி வழிபடுவது இந்த
நிலையில்தான்இறைவனுடன் ஒரு தோழமை பாவம் வந்து மிக நெருக்கமாகி இருவரும் கலந்துவிவது
யோகநெறீயாகும் சுந்தரரின் பக்தி இதற்க்கு எடுத்துகாட்டு
எல்லாவற்றுக்கும்
மேலாக கருதப்படுவது நான்காவது நெறியாகிய நாயகி – நாயக நெறிதான்  ஞானம் இன் நிலையில் இருபோர் தன் உயிருள் கலந்த
(உயிர்கலந்த) பக்தியுடன் கடவுளை உணர முற்படுகின்றார் இறைவன் தன் உயிரின் உயிரானவன்
என்று எண்ணி தன் உயிரையே தெய்வத்தின் உடல் என பாவித்து, உலகுயிரனைத்தும் அதன் திவலைகள்
என மதித்து, அன்பே உருவாய், அருளே மொழியாம், பண்பே பொருளாய், பராபரமே நிலையாய் வாழ
முற்படுகின்றார் இறைவன் தன் உருவில் உறைபவன் என சிந்திக்கத் தலைபடுகின்றார் இந்நான்காம்
நிலையில் இறைவனை பற்றற்று மதிக்கத் தலைப்படுகின்றனர் அவர் இறையன்பர்களைச் சுற்றமென்றும்,
என்னும் உயிர்களை குழந்தைகள் என்றும், உலகை குடும்பம் என்றும் மதிக்கத் தலைப்படுகின்றார்
இந்த நெறியை நமக்கு நன்கு உணர்த்தியவர் மாணிக்கவாசகர்  
சுருங்கச்
சொல்லின் சரியை – புறப்பூஜை, கிரியை அகப்பூஜையும், புறப்பூஜையுமாகும். யோகம் அகப்பூஜை
மட்டுமே. எல்லாமே ஞானத்தை எட்ட ஏணிப்படிகள்தான்
இவ்
நான்கு நிலையில் நின்றோர் பெரும் முக்திகள் முறையே சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்சியம்
சாலோகம்
- ஈசனவன் கூட்டத்தில் அவ்வுலகில் வாழ்வது 
சாமீபம்
- ஈசன் சமீபத்தில் அவன் ஆடும்பாதமடி வாழும் பேறு 
சாரூபம்
- ஈசனின் வடிவே தாமும் எய்தி வாழ்வது 
சாயுச்சியம்
- ஈசனே தன்னுள் கலந்து தான் அவனாகிவிட்ட அத்துவித நிலை சாயுச்சிய பதவி பெற்றோர்க்கு
மீண்டும் பிறவி இல்லை
சமயக்குரவர்கள்
அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிககவாசர் முறையே இந்த நான்கு வித முக்தியை அடைந்தார்கள்
என வரலாறு சொல்கிறது 
பாடல்
154 குறிப்பையும் பார்க்க
No comments:
Post a Comment